22
World Day for Water
Don't be afraid to be different.
இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள்.
1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார்.
2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்.
3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார்.
4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார்.
5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள்.
6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது .
7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார்.
8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார்.
9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார்.
10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார்.
11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார்.
ஒரு ஆண்மகனின் பதிவு.
இரவு என் அருகே என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது முகநூலில் ஒரு பெண்ணிடமிருந்து நட்புக்கான அழைப்பு வந்தது நான் உடனேஅதை ஒப்புக்கொண்டு யார் நீ என செய்தி அனுப்பினேன்
தான் யார் என்பதை அறிவித்தஅவள் உங்களுக்கு திருமணம் ஆகிவிடடதாகக் கேள்விப்பட்டேன் But I still miss you"என்று பதிலளித்தாள்
யோசித்துப் பார்த்தேன் நினைவுக்கு வந்தது அவள் அழகான அறிவான பெண் அவளுடன் நட்பாக பழகிய நிகழ்வுகள் என் நினைவுக்கு வந்தன.
ஒரு குறுகுறுப்புடன்
உரையாடலைத் தொடருவதற்கு முன் என் மனைவி தூங்குகிறாளா என்று அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன்.
நாள் முழுதும் வீட்டு வேலை செய்த களைப்பில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
நான் அவளை உற்றுப் பார்த்தபோது,
நான் யோசிக்க ஆரம்பித்தேன் -
தனக்கு முற்றிலும் புதிய வீட்டில் ஆழமாகவும் வசதியாகவும் தூங்கக்கூடிய அளவுக்கு அவள் எப்படி பாதுகாப்பாக உணர்கிறாள்?
அவள் தன் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறாள், அங்கு அவள் 24 வருடங்கள் தன் குடும்பத்தினரால் சூழப்பட்டிருந்தாள்.
அவள் கோபமடைந்தாலோ சோகமானாலோ அவளுடைய அம்மா அவளுக்காக இருந்தாள், தாயின் மடியில் விழுந்து அழுவாள்
. அவளுடைய சகோதரியோ சகோதரனோ நகைச்சுவைகளைக் கூறி அவளை வாய்விட்டு சிரிக்க வைப்பார்கள் அவளுடைய தந்தை வீட்டிற்கு வரும் போது அவள் விரும்பிய அனைத்தையும் கொண்டு வருவார்.
இத்தகைய சூழலில் வளர்ந்தவள் என் கரம்பற்றி என்னை நம்பி வந்திருக்கிறாள்.
இந்த எண்ணங்கள் என் சிந்தனைக்கு வந்த அடுத்த கணமே
நான் தொலைபேசியை எடுத்து அந்த நட்பை "பிளாக்" செய்தேன்.
அவளின் முகத்தை நோக்கிய வண்ணம் அவள் அருகில் உறங்கினேன்.
நான் ஒரு ஆண்மகன் தனது மனைவியை ஏமாற்றாத, அவளுடைய நம்பிக்கையை உடைக்காத ஒரு கணவன்
நான் எதைக் கண்டு அஞ்சுவதற்கு முன்பு நான் ஆண்டவனுக்கு அஞ்சுகிறேன்.......🌹✍........