15 நிமிடத்தில் மணமணக்கும்.. மணத்தக்காளி வத்தக் குழம்பு செய்வது எப்படி தெரியுமா?
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் * பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) * பூண்டு - 6 பல் * கறிவேப்பிலை - சிறிது உலர்ந்த மணத்தக்காளி வத்தல் - 1/4 கப் * புளிச்சாறு - 4 டேபிள் ஸ்பூன் / புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு * வத்தக் குழம்பு பொடி - 3 டேபிள் ஸ்பூன் * உப்பு - சுவைக்கேற்ப * சர்க்கரை/வெல்லம் - 1 டீஸ்பூன் * தண்ணீர் - 3 கப் செய்முறை: * முதலில் புளியை 1/2 கப் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதை நன்கு பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். * பின்பு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பிறகு அதில் உலர்ந்த மணத்தக்காளி வத்தலை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். * அடுத்து, அதில் சர்க்கரை, உப்பு மற்றும் வத்தக் குழம்பு பொடி சேர்த்து நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும். * பின் அதில் புளிச்சாறு ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி, குழம்பு சற்று சுண்டும் வரை நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், மணமணக்கும் மணத்தக்காளி வத்தக் குழம்பு தயார்.