தனித்து போகிறான் மனிதன்...
தவிக்கப் போகிறான்..!!!
:: காலையில் எழுப்பிட அம்மா வேண்டாம்..
-Alaram app இருக்கு!
::நடைபயிற்சிக்கு நண்பன் வேண்டாம்..
-Step counter இருக்கு!
::சமைத்து தந்திட அம்மா வேண்டாம்..
- Zomoto,Swiggy app இருக்கு!
::பயணம் செய்ய பேரூந்து வேண்டாம்..
-Upper,ola appஇருக்கு
::விலாசம் அறிய டீக்கடைக்காரரும்
ஆட்டோ ஓட்டுநரும் வேண்டாம்..
-Google map இருக்கு!
::மளிகை வாங்க செட்டியார் தாத்தா கடைக்கும்,அண்ணாச்சி கடைக்கும்
போக வேண்டாம்..
-big basket இருக்கு!
::துணிமணிகள் வாங்க கடைத்தெருவுக்கு போகவேண்டாம்..
-Amazon,flipkart app இருக்கு!
::நேரில் சிரித்து பேசிட நண்பன்
வேண்டாம்..
-Whatsapp,facebook இருக்கு!
::கைமாறாக பணம் வாங்க அங்காளியும்,பங்காளியும்
தேவையில்லை..
-Paytm appஇருக்கு!
::மற்றும் பல தகவல்களுக்கு நம்ம
-Google டமாரம் இருக்கு!
இப்படி தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..
app என்னும் ஆப்பு.
*உள்ளங்கை நெல்லிக்கனியென
நாம் நினைக்க..விரித்திருப்பதோ
மீளமுடியாத வலைதளம்..
சிக்கிக் கொண்டோம் பூச்சிகளாய்!
*விழித்தெழுவோம்..
செல்லின அடிமைகளாய் இல்லாமல்
உறவுகளோடும் சேர்ந்து ஒரு வலை
பின்னுவோம்..!!!
🌹